Monday, May 25, 2015

கூடமேல கூட வெச்சு

பாடல் : கூடமேல கூட வெச்சு
படம்  :  ரம்மி 
வரிகள் : யுகபாரதி
இசை : இமான்
பாடியவர்கள் : பிரசன்னா , வந்தனா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போன என்ன ...
ஒத்தையில  நீயும் போன அது நியாயமா?
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணானு சொன்னாலே போவேனே சேதாரமா ...


கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்ன
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
நீ தூபததாலே தேச்சு வெச்சேன் கருவேறமா
நான் போறேன்னு சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா


சாதத்துல கல்லபோல நெஞ்சுக்குள்ள நீ இருந்த
 செரிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உருத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சட பின்னுர..
சல்லிவேற ஆணி வேறாக்குர
சட்ட பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற
கூடமேல கூட வெச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன


எங்கவேனா போய்க்கோ நீ என்ன விட்டு
போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியததான் விட்டுபுட்டு தாமரையும்
போனதுன்னா தரைமேல தலை சாயுமே.
மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்னை பாக்க பாக்க தான் இன்பமே
நீ பாக்காம போனாலே கெடையாது மறு ஜென்மமே

கூடமேல கூட வெச்சு கூடலூரு hmm கூடலூரு போறவளே
நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்தையில  நீயும் போன அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நான் போறேன்னு சொல்லாம வரேனே உன் தாரமா
 நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா..



0 comments: