Wednesday, November 30, 2011

பிறை தேடும் இரவிலே உயிரே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : பிறை தேடும் இரவிலே உயிரே

படம்: மயக்கம் என்ன‌

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..
"உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
====
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
"என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி"

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..


விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
"இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்..."

டேய்.. விடுங்கடா…

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : பார்வதி… பார்வதி…

படம்: காதலில் சொதப்புவது எப்படி

இசை: தமன்

பாடியவர்கள்: சித்தார்த்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

கல்லு மண்ணு காணும் முன்ன
காதல் ஒண்ணு உண்டாச்சு
ஆணும் பொண்ணும் காதலிக்க
பூமி இங்கு ரெண்டாச்சு
பட்டு பட்டுக் கெட்டாலும்
கிட்டத்தட்டச் செத்தாலும்
ஒட்டுமொத்தக் கூட்டமெல்லாம்
காதலித்து சொதப்புவோம்!
காதலித்து சொதப்புவோம்!

டேய்.. விடுங்கடா…
classஉக்குப் போய்… படுங்கடா
என் கொடுமைய
பொலம்பத்தான் விடுங்கடா
போனதே போனதே ஆயிரங்-கால்
ஃபோனில் எந்தன் பேரைக் கூட தூக்கிவிட்டாள்
கோடி சாரி சொல்லி போட்ட எஸ்ஸெமெஸ்ஸை
குப்பை லாரி ஏத்தி விட்டாள்
it’s over… it’s over…
எல்லாமே is over…
status single மாற்றி விட்டாளே!

பார்வதி… பார்வதி…
பாதி ரூட்டில் தள்ளி விட்டாளே
பார்வதி… பார்வதி…
நெஞ்சில் முற்றுப் புள்ளியிட்டாளே
பார்வதி… பார்வதி…
போதும் என்று சொல்லி விட்டாளே
பார்வதி… பார்வதி…
காதலுக்கு கொள்ளியிட்டாளே

டேய்.. கடவுளே…

உனக்கென்ன குற வெச்சேன்?
என் கதையில
tragedy ஏன் வர வெச்ச?
ஊரெலாம் சுத்திட யாரிருக்கா?
பைக்கில் என்னை கட்டிக்கொள்ள யாரிருக்கா?
மூவி போக மூடு மாத்த யாரிருக்கா?
மோட்டிவேஷன் யாரிருக்கா?
it’s over… it’s over
எல்லாமே is over
என்று சொல்லி ஓடி விட்டாளே

பார்வதி… பார்வதி…
கும்பலோடு சுத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
முத்தவிட்டு கத்த விட்டாளே
பார்வதி… பார்வதி…
சங்கு ஊதி மூடி விட்டாளே
பார்வதி… பார்வதி…
சிங்கிள் சிங்கம் ஆக்கி விட்டாளே



என்ன இது இது என்ன தொல்லை

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : என்ன இது இது என்ன தொல்லை

படம்: மௌனகுரு

இசை: தமன்

பாடியவர்கள்: ராகுல் நம்பியார், ரஞ்சித்,ரீட்டா, ரம்யா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


என்ன இது இது என்ன தொல்லை
என் மனசு என்னிடமும் இல்லை
மௌனம் வந்து விழுங்குது
சொல்லைஏனோ
காலிரண்டும் உடன் வரவில்லை
புன்னகையும் புரிந்திடவில்லை
கண்ணிமைகள் உறங்கிடவில்லை
ஏனோ ஏனோ.........

உந்தன் தனிமையின் உலகினில் முதன்முறை
ஒருமுகம் அடிக்கடி அடிக்கடி வருதோ
உந்தன் தலையணை உறைகளில்
கனவெனும் பூச்செடி வட்டமிட்டு பூக்களைத்தருதா
உந்தன் நடையுடை பாவனை சிந்தனை யாவிலும்
புதுப்புது மாற்றங்கள் வருதா

ஒரு செல்லமான கள்ளத்தனம்
கண்ணுக்குள்ளே வந்து நின்று
விட்டுவிட்டு வேதனைகள் தருதா



இது ஏனோ இது ஏனோ
என்னயிதுவோ என்னயிதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
கண்ணை மூடி உன்னை நீயே
உற்றுப்பார்த்தால்
உள்ளம் சொல்லாதா

என்ன இதுவோ என்ன இதுவோஎன்னவென்று
அய்யோதெரியாதா
ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்து
ஒன்றாகும் உண்மைப் புரியாதா
ஏனோ ஏனோ

(என்ன இது )........

நேரம் வரும் வரை என் மனதுக்குள்
நூறு தீ அலை இது எதனாலோ
அய்யோ

பார்வை ஒரு முறை நீ பார்த்ததும்
சாரல் பலமுறை எதனாலோ
நீ ஒருமுறை பார்த்தால்
இருதயம் உறையும்
இது என்ன இது ஏனோ

அய்யோ நீ மறுமுறை பார்த்தால்
இருதயம்
இது என்ன இது ஏனோ

ஒன்றாக தொலைந்தோமோ
என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று அய்யோ தெரியாதா
விரும்பிவந்து மாட்டிக்கொண்ட
மந்திரத்தை உள்ளம் சொல்லாதா
என்ன இதுவோ என்ன இதுவோ
என்னவென்று
அய்யோ தெரியாதா
திரும்ப திரும்ப மாட்டிக்கொள்ளும்
தந்திரத்தால் உள்ளம் துள்ளாதா
ஏனோ ஏனோ....

அழைப்பாயா? அழைப்பாயா?

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : அழைப்பாயா? அழைப்பாயா?

படம்: காதலில் சொதப்புவது எப்படி

இசை: தமன்

பாடியவர்கள்: கார்த்திக் ,ஹரினி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


விழுந்தேனா? தொலைந்தேனா?
நிறையாமல் வழிந்தேனா?
இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்,
சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன்.
காலில்லா ஆமை போலவே
காலம் ஓடுதே!
இங்கே உன் இன்மையை உணர்கிற போது
ஒரே உண்மையை அறிகிறேன் நானே.
எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது
உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணியே
இருதயம் துடிக்குதே!

அழைப்பாயா? அழைப்பாயா?
நொடியேனும் அழைப்பாயா?
பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே…!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
படிக்காமல் கிடக்கின்றேன்
கடிகாரம் கடிக்கின்றேன் விடியாமலே…!
அழைப்பாயா?

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன்
நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன்
நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்
நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்
நிலைமை தொடர்ந்தால்… என்ன நான் ஆகுவேன்?
மறக்கும் முன்னே
அழைத்தால்… பிழைப்பேன்…

அழைப்பாயா? அழைப்பாயா?
அலைபேசி அழைப்பாயா?
தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே…!
அழைப்பாயா?

அழைப்பாயா? அழைப்பாயா?
நடுஜாமம் விழிக்கின்றேன்
நாட்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே…!
அழைப்பாயா?


ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே
என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே
என் நாசி மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே
நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூளும் நெஞ்சின் மேலே
சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே
இதயம் இங்கே
வேறெதோ… நேருதே…

அழைப்பாயா? அழைப்பாயா?
தவறாமல் அழைப்பாயா?
தவறாக அழைத்தாலே அது போதுமே…!
அழைப்பாயா?
அழைப்பாயா? அழைப்பாயா?
மொழியெல்லாம் கரைந்தாலும்
மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே!
அழைப்பாயா?


நான் சொன்னதும் மழை வந்துச்சா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா

படம்: மயக்கம் என்ன‌

இசை: ஜி.வி.பிரகாஷ்

பாடியவர்கள்: நரேஷ் ஐயர்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற
அடி போடி போடி போடி போட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன துக்கி போக தான் வருவேன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா

கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நெறத்து முல்ல
எடுவட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி

ஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பாக்க உசுபெத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு .. ஆடு ..

ஆத்தாடி ஆடு மேய்க ராசா வந்தாரா
எங்க -ஆடு தின்ன எச்சி புல்ல மேய்ய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணா முடி கொஞ்ச சாஞ்ச போதும்
கனுவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்

நீ வரையாடி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மைக்கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு

காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தேல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்சல்லாம் நின்னு போய் மூல சுத்துது