Tuesday, September 27, 2011

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

படம்: எங்கேயும் எப்போதும்

இசை: சத்யா

பாடியவர்கள்: சத்யா, சின்மயி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான்
உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம்
தடதடதட வென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்
வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழிபார்க்கும் போதே மரமாய்
இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல
காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம்
தட்டிப் பார்க்குதே பார்க்குதே ..
பார்க்குதே ..தோற்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள்
நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை
கண்டால் உருகிட வைத்தான் அடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னைத்
தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள்
பற்றிக் கொண்டதே கொண்டதே
கொண்டதே... வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில்
என் நெஞ்சை பறக்க வைத்தாய்


என் நண்பனே என்னை

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : என் நண்பனே என்னை

படம்: மங்காத்தா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: மதுஸ்ரீ, யுவன் ஷங்கர் ராஜா

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))


என் நண்பனே என்னை எய்த்தாய்...... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன் ......ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக்கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே
கங்கை நதியல்ல கானல் நதியென்று
பிற்பாடு ஜானம் வந்து லாபம் என்னவோ?

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே

வலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன்
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான்
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ

என் நண்பனே என்னை எய்த்தாய்

காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே...
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு
உனக்கென்ன தெரியும்!
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை..... ஓ
எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே....
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே....