Tuesday, June 8, 2010

ஒரு வானவில்லின் பக்கத்திலே

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

பாடல் : ஒரு வானவில்லின் பக்கத்திலே

படம்:காதல் சொல்ல வந்தேன்

இசை:யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்:உதித்நாராயணன்

வரிகள்:நா. முத்துகுமார்

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

ஒரு வானவில்லின் பக்கத்திலே
வாழ்ந்து பார்க்கிறேன் நானே
என் வாசல் மட்டும் நனைக்கும்
மழையாய் பார்க்கிறேனே
என்னை சொட்ட சொட்ட நனையவைத்தாய்
நெஞ்சை கிட்டத்தட்ட கரையவைத்தாயே
அவள் அழகென்னும்
நதியில் விழுகிறேன் துணையாய்
என்னை உருமாற்றினாய்
காதல் கதை ஏற்றினாய்

(ஒரு வானவில்லின்..)

நேற்று வரையில் நான் காற்று வீசினால்
நின்று ரசித்ததே இல்லை
விரல்கள் கோர்க்கையில் விருப்பம் கொடுத்திடும்
நெருப்பில் எறிந்ததே இல்லை
தொட்டு பேசினால் எவனோ ஆகிறேன்
உன்னை விட்டு பிரிகையில் கொஞ்சமாய் சாகிறேன்
மிதக்கிறேன் பறக்கிறேன் மேகத்தை பிடிக்கிறேன்
அருகிலே சந்தியா யோகத்தில் குதிக்கிறேன்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

எங்க நடக்கிறேன் எதற்கு நடக்கிறேன்
வழதை மறக்கிறேன் நானே
குடைகள் இருந்துமே மழையில் நனைவது
காதல் வந்தப்பின் தானே
தந்தை அருகிலே இதுவரை தூங்கினேன்
தன்னந் தனிமையை இன்று நான் விரும்பினேன்
இது என்ன இளமைகள் நடத்திடும் மோதலா
இதயத்தில் கொதிக்கிற கழிச்சலே காதலா
இதுப்போதும் பெண்ணே இதுப்போதும்

(ஒரு வானவில்லின்..)

0 comments: