Sunday, April 4, 2010

உசுரே போகுதே உசுரே போகுதே ...

இந்த பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ளே தீப்பொறியா நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

அடி தேக்கு மரக் காடு பெருசு தான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனசதாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்க ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன
தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மன்மத கிறுக்கு தீருமா
அடி மந்திரிசி விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிசிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும்
இப்போ தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ..... மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விறிக்குது தாமர
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமும் போகல

பாம்பா? விழுதா?
ஒரு பாகுபாடு தெரியலயே
பாம்பா இருந்து நெஞ்சு
பயப்பட நெனைக்கலியே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா?
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும் சுத்தி
ஒரே கோட்டில் வருகிறதே
சத்தியமும் பத்தியமும் இப்போ
தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிபிச்சை கேக்குறேன்
மனச தாடி என் மணிக்குயிலே

அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி
அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

0 comments: