Sunday, January 17, 2010

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

படம் : அலை
பாடல் : என் ரகசிய கனவுகள்
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கார்த்திக் ராஜா, ஸ்ரீவர்தினி

(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?
மழை போலே வருவானா?
மடி மேலே விழுவானா?
மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவனா?

ஒரு முறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்

கண்களால் நெஞ்சிலே காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்

இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தேன் உனக்குள் எழுந்தேன்

காதல் நீரிலே மூழ்கி போகிறேன்
கையை நீட்ட வா கரையில் சேர்க்க வா…
இவன் தானா? இவன் தானா?
இவனோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா?
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா? செய்பவனா? செய்பவனா?—

தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா?
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா?

வெட்கத்தை வீசியே வா என சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்

அணைப்பாய் என நான் தவியாய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யாய் முறைதேன்

கன்ன குழிகள் தான் காதல் தேசமா?
ஈர முத்தம் தான் இன்ப தீர்த்தமா?
இவள் தானா? இவள் தானா?
இவளோடு இணைவேனா?—

என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா?

என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அலும்புகள் செய்பவளா?
மழை போலே வருவாளா?
மடி மேலே விழுவாளா?

மலர் போலே தொடுவானா? தொடுவானா?
இவன் தானா?இவள் தானா?

இவனோடு இணைவேனா?இவன் தானா?
இவள் தானா?
இவனோடு இணைவேனா?


0 comments: