Thursday, May 24, 2007

ஏதோ நினைக்கிறேன்

பெண் : ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன் (4)
ஆண் : பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்: அடடா அடடா காதல் அழகிய தொல்லை!
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும் ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்(2)

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:ஊரைச் சுற்றிப்பார்த்தாலும்
உன்னைச் சுற்றிப்பார்க்கிறேனே அன்பே என்னன்பே

ஆண்:யாரைப்பற்றிக்கேட்டாலும்
உன்னைப்பற்றிச் சொல்கிறேனே அன்பே என்னன்பே

பெண்: உலகமெல்லாம் அழகாக உன்னாலே தெரிகிறதே!
துடிக்கிற இதயத்தின் ஓசைகள் நீயே

ஆண்: இது என்ன நான்தானா ஏனிந்த மாற்றம்
இன்றென்ன திருநாளா நெஞ்சில் கொண்டாட்டம்!
அடடா அடடா காதல் அழகிய தொல்லை

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்!
ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்(2)

பெண்:கண்ணாடிக்குப் பொட்டு வைத்தே
உன் நினைவை ஒட்டிக்கொண்டேன் காதல் இதுதானா?

ஆண்: கண்மூடீயும் உன்னைக் கண்டேன்
கள்ளத்தனம் கற்றுக்கொண்டேன் காதல் இதுதானா?

பெண்: அக்கம் பக்கம் யாருமில்லை
அப்போதும் நான் சொல்லவில்லை
தனிமையில் இருந்தாலும் மனதுக்குள் சொன்னேன்

ஆண்: நெருக்கமாக நிற்க துணிச்சலும் இல்லை
விட்டு விலகி நடக்க மனம் வரவில்லை
அடடா அடடா காதல் அழகிய தொல்லை!

பெண்:உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

ஆண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்
பெண்:ஏதோ நினைக்கிறேன் அதை ஏனோ மறைக்கிறேன்

ஆண்: பேசிடத்தானன்பே மொழி வரவில்லை
மௌனமாய்த் திரும்ப மனம் வரவில்லை

பெண்:அடடா அடடா காதல் அழகிய தொல்லை
உன்கிட்ட ஒன்ணு சொல்லணும்
ஒண்ணோட ஒண்ணாயிருக்கணும்

0 comments: