Thursday, May 17, 2007

எந்தன் நெஞ்சில் நீங்காத

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா

(எந்தன்........)

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

ஆ:
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெ:
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

(எந்தன்...........)

பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்

ஆ:
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...

பெ:
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

(எந்தன்.........)

0 comments: