Wednesday, November 7, 2018

தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே

பாடல்  : தாபங்களே ரூபங்களாய்
படம் : 96
வரிகள் : உமா தேவி
இசை : கோவிந்த்
பாடியவர் : சின்மயி

+++++++++88888888888888+++++++++++

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே
விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

காலம் இரவின் புறவியாகாதோ
அதே கானா அதே வினா
வானம் நழுவி தழுவியாடாத
அதே நிலா அருகினில் வருதே

தாபங்களே ரூபங்களாய்
படுதே தொடுதே அழகினை சுடுதே
தாயாகவே தாலாட்டுதே

விழி வழி மொழி வழியினில்
கதையாய் வருதே

நான் நனைந்திடும் தீயா
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனைதானா
காதல் கனாக்கள் தானா
தீரா உலா நானா போதாதா

எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும்

பாடல்  : எதுவரை போகலாம்  
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா 
வரிகள் : தாமரை
இசை : தர்புகா சிவா
பாடியவர் : சித் ஸ்ரீராம், ஷாஷா திரிபாதி
+++++++++88888888888888+++++++++++


எதுவரை போகலாம் ?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்…
தேன் முத்தங்கள்
மட்டுமே
போதும் என்று சொல்வதால்…
தொடாமல் போகிறேன்…
யார்யாரோ கனாக்களில்…நாளும்
நீ சென்று உலாவுகின்றவள் !
நீ காணும்
கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்..!

பூங்காற்றே நீ வீசாதே..!
ஓ..ஓ..ஓ..
பூங்காற்றே நீ வீசாதே…
நான் தான் இங்கே விசிறி..!

என் வீட்டில்…
நீ நிற்கின்றாய்..!
அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !
தோட்டத்தில்…
நீ நிற்கின்றாய்..!
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச் சென்றேன்..!

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்…
நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..?
பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்…
வேண்டாமே
நீ வேண்டும் என்றேன்…
உயிரே..!

நேற்றோடு…
என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !

காற்றோடு…
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !

உனைப் பார்க்காத நாள்
பேசாத நாள்…
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்..!

தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்…
ஆனேன் நான்
ஆனந்தப் பெண்பால்..!
உயிரே ..!

எதுவரை போகலாம்..?
என்று நீ
சொல்ல வேண்டும்
என்றுதான்
விடாமல் கேட்கிறேன்…

தேன் முத்தங்கள்

மட்டுமே போதும்
என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்..

உன்போன்ற
இளைஞனை…
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…!
கண்டேன் உன்
அலாதித் தூய்மையை !
என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!

பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ…
பூங்காற்றே நீ வீசாதே…
நான்தானிங்கே விசிறி..!

விளம்பர இடைவெளி மாலையில்

பாடல்  : விளம்பர இடைவெளி மாலையில் படம் : இமைக்கா நொடிகள்வரிகள் : கபிலன் வைரமுத்துஇசை : ஹிப்பாப் தமிழாபாடியவர் : கிறிஸ்டொபர் ஸ்டான்லி,ஸ்ரீனிஷா ஜெயசீலன்,  சுதர்சன் அசோக்
+++++++++88888888888888+++++++++++

ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...

காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே...

இவளின் கனவோ... உள்ளே ஒளியும்
இரவும் பகலும்... இதயம் வழியும்
வழியும் கனவு... இதழை அடையும்
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்...

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்....

நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே....

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மத‌மே இல்லா இறைவன் நீயோ
வயதை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்....

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்...


Thursday, November 1, 2018

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன


பாடல்  : சொக்கவச்சப் பச்சக்கிளி 
படம் : உறியடி
வரிகள் : அந்தோணிதாசன்
இசை : அந்தோணிதாசன் 
பாடியவர் : அந்தோணிதாசன்

+++++++++88888888888888+++++++++++


தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா

யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்குவெக்கப்பட்டு போனதென்ன

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானேஎன் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி
செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச சொல்லேண்டி என் செல்லக்குட்டி
கண்டேனடி காதலியே உன் முகத்த நேத்துத்தான்
கொண்டேன் ஆசைப் பூங்கொடியே
உன்கூட நான் சேரத்தான்

பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாததுபோல் நடிக்காதே
பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்

கொஞ்ச காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாதடி உன்ன நானும் ஆளத்தான்
செல்லமடி நீ இருந்தா என் வாழ்க்கையும் சோலைதான்
புள்ளக்குட்டி பெத்து வாழும் ஆலம் விழுதப் போலத்தான்

கண்ணே என்ன விட்டு நீயும் ஒதுங்கிப் போக நினைக்காதே
காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே

மானே மானே உறவென நினைச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே
என் உசுருக்குள் ஒளிச்சேனே

சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன

தானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா தன்னன்னான தனனானா
தன னானா னானா

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே


பாடல்  : ஆக்சிஜன் தந்தாயே
படம் : கவன்
வரிகள் : கபிலன் வைரமுத்து
இசை : ஹிப்பாப் தமிழா 
பாடியவர் : ஹிப்பாப் தமிழா , சுதர்சன்

+++++++++88888888888888+++++++++++

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

ஓடும் நதியில் இலையைப் போலே நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிறமின் ஒளியோ சூடாய் பொழிகிறதே.
கனாபமே எனைக் கீறினாய்
மழை மேகமே பிழையாகினாய்.
என் வாசலில் சுவராகினாய்
மீண்டும் மறுத் தூண்டில் இடவாத் தோன்றினாய்.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

உலா உலா கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா.
முயல் இடை திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததோ.
வெட்டவெளி வானம் எங்கும்
வட்டமுகம் கண்டேன் கண்டேன்.
நட்ட நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம்மிடும் காதல் கொண்டேன்.
காலமதை தீர்ந்தால் கூட
காதல் அது வாழும் என்றேன்.
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே.

தனியாக நடமாடும் பிடிவாதம் உனது
நிழலோடும் உரசாத தன்மானம் எனது.
இணையில்லா பொருளல்ல
அடி காதல் மனதில்.
அகலாத ஒரு நினைவு
அது மலையின் அலகு.
ஆண்ட கதையில் கூட
அநியாய தூரம் தொல்லை.
உன் இதயம் அறியாது அழகே
என் இதயம் எழுதும் சொல்லை.
மௌனமாய் தூரம் நின்றால்
மடியிலே பாரம் இல்லை.
மீண்டும் ஒரு காதல்செய்ய
கண்களில் ஈரம் இல்லை.

ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம் திருடிப் போனாய் எதனாலே


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்


பாடல்  : கண்ணை விட்டு கன்னம் பட்டு
படம் : இருமுகன்
வரிகள் : மதன் கார்கி
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு 

+++++++++++88888888888888+++++++++++


கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
என் கண்ணீரே என் கண்ணீரே…
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே

இன்னும்இன்னும் என்னை என்ன செய்வாய் அன்பே
உன் விழியோடு நான் புதைவேனா
காதல்இன்றி ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு நான் நுழைப்பேனா
செதிலாய் செதிலாய் இதயம் உதிர
உள்ளே உள்ளே நீயே
துகளாய் துகளாய் நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே

தனி உலகினில் உனக்கென நானும்
ஓர் உறவென உனக்கென நீயும்
அழகாய் பூத்திடும் என் வானமாய்
நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன்
ஏன் எழுப்பி நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
ஏன் நிஜத்தினில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலே நாமும் இன்கே
நம்முன் பூத்த காதல் எங்கே

கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய்
வானம் விட்டு என்னைத் தொட்டு நீயே வந்தாய்
மழையாய் அன்று பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய் பெண்ணே
இசையாய் அன்று கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய் பின்னே பின்னே
கண்ணை விட்டு கன்னம் பட்டு


ஹே... பெண்ணே என் நெஞ்சில்


பாடல்  : ஹே... பெண்ணே என் நெஞ்சில்
படம் : ப்யார் ப்ரேமா காதல்
வரிகள் : நிரஞ்ஜ‌ன் பாரதி
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : சித் ஸ்ரீராம்

+++++++++88888888888888+++++++++++

ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்
உன்னை போலவே நான் இங்கே
மயங்கி கிறங்கி தான் போனேனே
போதையாக தான் ஆனேனே தள்ளாடும் ஜீவனே

ஜன்னலோரமாய் முன்னாலே 
மின்னல் போலவே வந்தாயே
விண்ணை தாண்டி ஒரு சொர்கத்தை
மண்ணில் எங்குமே தந்தாயே
விழியை நீங்கி நீ வில‌காதே
நொடியும் என் மனம் தாங்காதே
என்ன நேருமோ தெரியாதே
என் ஜீவன் ஏங்குதே


என் உயிரினை வதைத்திடும் அழகி நீ
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி
உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே

உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா
இருந்தும் உன் இதழ்கள்
அந்த வார்த்தையை சொல்லுமா


குருவி போலவே என் உள்ளம்
தத்தி தாவுதே உன்னாலே
குழந்தை போலவே என் கால்கள்
சுத்தி திரியுதே பின்னாலே
தீயை போலவே என் தேகம்
பத்தி எரியுதே தன்னாலே
அருவி போலவே ஆனந்தம்
நில்லாமல் பாயுதே

ஹே... பெண்ணே என் நெஞ்சில்
சாய்ந்து சாய்க்கிறாய்
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்